Newsஇந்திய - ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

இந்திய – ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

-

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த நீர்த் துளியை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், அது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது.

அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்

இது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் புவி அறிவியல் மையத்தின் ஆய்வு மாணவர் பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவிக்கையில் ,

பழமையான கடலின் ஆண்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து பெரிய விவரங்கள் தெரியவில்லை. தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் என்ன வேற்றுமை, என்ன ஒற்றுமை என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், அது புவியின் காலநிலை வரலாற்றை புரிந்துகொள்ள உதவியாக அமையும் என பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...