Newsஇந்திய - ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

இந்திய – ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

-

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த நீர்த் துளியை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், அது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது.

அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்

இது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் புவி அறிவியல் மையத்தின் ஆய்வு மாணவர் பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவிக்கையில் ,

பழமையான கடலின் ஆண்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து பெரிய விவரங்கள் தெரியவில்லை. தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் என்ன வேற்றுமை, என்ன ஒற்றுமை என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், அது புவியின் காலநிலை வரலாற்றை புரிந்துகொள்ள உதவியாக அமையும் என பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...

உண்மை மற்றும் பொய்களை AI கண்டறிவதில் ஆஸ்திரேலியர்களுக்கு சிக்கல்

காமன்வெல்த் வங்கி நடத்திய புதிய ஆய்வில், ஆஸ்திரேலியர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களைப் பற்றிய தங்கள் அறிவை மிகைப்படுத்தி மதிப்பிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 89 சதவீத ஆஸ்திரேலியர்கள் AI-உருவாக்கும்...

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

விமானம் இரு முறை அடிலெய்டுக்குத் திரும்பியதால் பயணிகள் 6 மணி நேர தாமதம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து Port Lincoln-இற்கு சென்ற QantasLink விமானம் இரண்டு முறை திருப்பி விடப்பட்டதால் பயணிகள் ஆறு மணி நேரம் தாமதமாகினர். அந்த விமானம்...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...