Newsஇந்திய - ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

இந்திய – ஜப்பான் ஆய்வில் இமயமலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

-

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த நீர்த் துளியை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில், அது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது.

அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்

இது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் புவி அறிவியல் மையத்தின் ஆய்வு மாணவர் பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவிக்கையில் ,

பழமையான கடலின் ஆண்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து பெரிய விவரங்கள் தெரியவில்லை. தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் என்ன வேற்றுமை, என்ன ஒற்றுமை என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், அது புவியின் காலநிலை வரலாற்றை புரிந்துகொள்ள உதவியாக அமையும் என பிரகாஷ் சந்திர ஆர்யா தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...