Newsஅவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

-

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.

7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.

பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...