Newsஅவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

-

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.

7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.

பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...