Newsஅவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

-

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.

7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.

பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...