Newsஅவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

-

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.

7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.

பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...