Breaking Newsஆஸ்திரேலியாவுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள இரண்டு App-கள் அடையாளம்

ஆஸ்திரேலியாவுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள இரண்டு App-கள் அடையாளம்

-

Tik Tok மற்றும் WeChat ஆகியவை ஆஸ்திரேலியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டு வெளிநாட்டு செல்வாக்கு பெற்ற பயன்பாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து சமூக ஊடக நெட்வொர்க்குகளையும் வெளிப்படையான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்குவது அல்லது நாடு முழுவதும் அவற்றின் பயன்பாட்டை தடை செய்வது உட்பட 17 பரிந்துரைகள் இதில் அடங்கும்.

மத்திய அரசு இயற்றியுள்ள சட்டங்களை பின்பற்றாத சமூக ஊடக நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான டிக் டோக், தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற சந்தேகத்தைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் அரசாங்க தொலைபேசிகளில் அதன் பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.

அரசு திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் போன்களில் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...