News37 ஆண்டுகளுக்கு பிறகு பனி பாறைக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல்

37 ஆண்டுகளுக்கு பிறகு பனி பாறைக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல்

-

தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு.

இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழுகின்றது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு மலையேற்ற வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள தியோடுல் பனிமலையை கடந்து சென்ற மலையேற்ற வீரர்களால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உடல் பாகங்கள் அருகிலுள்ள நகரமான சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

1986 ஆம் ஆண்டு மலையில் காணாமல் போன 38 வயது மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் பாகங்கள் என்பதை DND பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது.

மலை ஏறியவரின் அடையாளம் மற்றும் அவர் இறந்த சூழ்நிலை குறித்து காவல்துறை கூடுதல் தகவல்கள் ஏதும் வழங்கவில்லை. இருப்பினும், பனிப்பாறைகளின் அடியிலிருந்து கிடைத்ததாக, காணாமல் போன நபருக்கு சொந்தமானதாக சொல்லப்படும் நீண்ட காலணி (ஹைகிங் பூட்) மற்றும் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் உலோக கொக்கிகள் (க்ராம்பன்) ஆகியவற்றின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர்.

‘செப்டம்பர் 1986 ஆம் ஆண்டு 38 வயதான ஜெர்மன் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், மலையேற்றத்திலிருந்து திரும்பாததால் முறைபாடு பதிவு செய்யப்பட்டு, அவர் ‘காணாமல் போனவராக’ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்போது கிடைத்திருக்கும் உடல், அவரது உடல்தான் என பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது.

பனிப்பாறைகள் உருகி குறையும் போது, அவை பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போனதாக கருதப்படும் பல மலையேறுபவர்களை குறித்த விவரங்களை அதிகளவில் கொண்டு வருகின்றன ‘ என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு கோடை காலத்திலும், ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகும்போது, பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மனிதர்கள் மற்றும் வேறு பொருட்கள் வெளிப்படுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

Palen Creek-இல் காரைத் திருடி மோதியதாகக் கூறி தப்பியோடிய கைதி கைது

கடந்த மாதம் பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு கைதி, நேற்று காலை திருடப்பட்டதாகக் கூறப்படும் காரை மோதிய பின்னர் பிடிபட்டார். மே 27 அன்று...

குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட பணமோசடி கும்பல் – 21 மில்லியன் டாலர்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து காவல்துறை பணமோசடி கும்பல் தொடர்பாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் தங்கள் துணையை மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25%...

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...