Newsஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு விதித்த சீனா

ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு விதித்த சீனா

-

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது.

குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் தூக்கமிழப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக கூறப்படும் நிலையில், சீன அரசாங்கம் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்பாடு சார்ந்து புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பான வரைவை சீன அரசாங்கம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்தக் கூடாது.

8 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரமும் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டும்.

மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசி இணைய சேவையை பயன்படுத்தக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்க செப்டம்பர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் இணைய கேம் விளையாடக் கூடாது என 2019 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் கட்டுப்பாடு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

Open Aiயை விலைக்கு கேட்ட எலான் மஸ்க்- பதில் கொடுத்த சேம் ஆல்ட்மேன்

SpaceX, Tesla உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை தலைவராக...

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் ஒருவரின் விசாவை ரத்து செய்த அதிகாரிகள்

ஆஸ்திரேலியாவில் படிக்கும் சர்வதேச மாணவரின் மாணவர் விசாவை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட மாணவர் வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக...

டிரம்பின் புதிய வரிகளால் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வரி காரணமாக ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும், நிவாரணம் வழங்குவதில் தான் கவனம்...

காதலால் $800,000 இழந்த ஆஸ்திரேலிய பெண்

போலி காதலர்கள் போல் நடித்து மோசடி செய்த நபர்களால் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கிட்டத்தட்ட $800,000 இழந்துள்ளார். 57 வயதான அந்தப் பெண் பெர்த்தில் வசிப்பவர் என்று...

மெல்பேர்ணில் அதிகரித்துவரும் வீட்டு தீ விபத்துக்கள்

கடந்த சில நாட்களில் மெல்பேர்ணில் வீடுகள் தீப்பிடிப்பது தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. Kurunjang-இல் உள்ள Cameron Court-இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11) அதிகாலை...

காதலால் $800,000 இழந்த ஆஸ்திரேலிய பெண்

போலி காதலர்கள் போல் நடித்து மோசடி செய்த நபர்களால் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கிட்டத்தட்ட $800,000 இழந்துள்ளார். 57 வயதான அந்தப் பெண் பெர்த்தில் வசிப்பவர் என்று...