Cinemaஎன்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு - பிரபல நடிகர் வேதனை!

என்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு – பிரபல நடிகர் வேதனை!

-

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் யூடியூப் சேனல் ஒன்றில் தன் சினிமா வாழ்க்கையைக் குறித்துப் பேசினார்.

அப்போது, “கலகலப்பு என்கிற படத்தில் பொன்னம்பலத்துடன் நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் நடித்தேன். அதன்பின், ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும் முத்துக்காளையும் வடிவேலு என்னைக் காண ஆசைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.

நானும் என் குருநாதரைக் காணப்போகிறேன் என்கிற ஆர்வத்தில் அவரை தனியறை ஒன்றில் சந்தித்தேன். என்னைப்போலவே நடிக்கிறாய் எனப் பாராட்டினார். பின், முத்துக்காளையும் போண்டாமணியும் அறையைவிட்டு வெளியேறியதும் நானும் கிளம்ப தயாரானேன்.

ஆனால், வடிவேலு என்னை இருக்க சொல்லி, ஏன் என்னை மாதிரியே நடிப்பேன் எனக்கூறி ஒவ்வொரு கம்பெனியாக ஏறிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படத்தில் நடித்தேன் என்றதுடன் இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் சொன்னேன்.

திடீரென, பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். தாறுமாறாக அடிவிழுந்தது. அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன்” என வேதனையுடன் கூறியுள்ளார். இது இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க முன்வரும் மெல்பேர்ண் வாரிசுகள்

மெல்பேர்ண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது Wurundjeri Woi-Wurung மக்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் பூர்வீக உரிமைகள் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் பாரம்பரிய உரிமைகள் மற்றும்...