Cinemaஎன்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு - பிரபல நடிகர் வேதனை!

என்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு – பிரபல நடிகர் வேதனை!

-

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் யூடியூப் சேனல் ஒன்றில் தன் சினிமா வாழ்க்கையைக் குறித்துப் பேசினார்.

அப்போது, “கலகலப்பு என்கிற படத்தில் பொன்னம்பலத்துடன் நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் நடித்தேன். அதன்பின், ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும் முத்துக்காளையும் வடிவேலு என்னைக் காண ஆசைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.

நானும் என் குருநாதரைக் காணப்போகிறேன் என்கிற ஆர்வத்தில் அவரை தனியறை ஒன்றில் சந்தித்தேன். என்னைப்போலவே நடிக்கிறாய் எனப் பாராட்டினார். பின், முத்துக்காளையும் போண்டாமணியும் அறையைவிட்டு வெளியேறியதும் நானும் கிளம்ப தயாரானேன்.

ஆனால், வடிவேலு என்னை இருக்க சொல்லி, ஏன் என்னை மாதிரியே நடிப்பேன் எனக்கூறி ஒவ்வொரு கம்பெனியாக ஏறிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படத்தில் நடித்தேன் என்றதுடன் இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் சொன்னேன்.

திடீரென, பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். தாறுமாறாக அடிவிழுந்தது. அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன்” என வேதனையுடன் கூறியுள்ளார். இது இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...