Newsடோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

டோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

-

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் வருமானம், விளம்பர வருமானம், தொழில் வருமானம் என ஆண்டிற்கு பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் டோனியின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடிகளை தாண்டியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது 8 வயதை எட்டியுள்ள ஸீவா ராஞ்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி (டாரியன்) ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளி கட்டணம் மட்டும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு கட்டணத்தை தவிர்த்து கூடுதலாக சில கட்டணங்களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோன்று அந்தப் பள்ளியில் போர்டிங் முறையில் படித்தால் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...