Newsடோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

டோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

-

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் வருமானம், விளம்பர வருமானம், தொழில் வருமானம் என ஆண்டிற்கு பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் டோனியின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடிகளை தாண்டியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது 8 வயதை எட்டியுள்ள ஸீவா ராஞ்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி (டாரியன்) ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளி கட்டணம் மட்டும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு கட்டணத்தை தவிர்த்து கூடுதலாக சில கட்டணங்களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோன்று அந்தப் பள்ளியில் போர்டிங் முறையில் படித்தால் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...