Newsதீ விபத்தில் தந்தை மற்றும் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

தீ விபத்தில் தந்தை மற்றும் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை

-

தந்தையையும் அவரது 05 பிள்ளைகளையும் பலிகொண்ட வீடு தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை, ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிவதே நோக்கம்.

பிரிஸ்பேனின் தென்கிழக்கு பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 03 வீடுகள் எரிந்து நாசமானதுடன், ஒரே வீட்டில் இருந்த 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 34 வயதுடையவர் எனவும் பிள்ளைகள் 03 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண்ணும், மற்ற இரண்டு வீடுகளில் இருந்த 07 பேரும் தீக்காயம் அடைந்தவர்களில் அடங்குவர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...