Newsஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

ஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

-

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் விக்டோரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அதிநவீன வேகக் கமெராக்களைப் பயன்படுத்தி இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

3 மாத முன்னோடி திட்டத்தில் மட்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 7,000 சாரதிகள் அடையாளம் காணப்பட்டனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது வாகனம் வெளியிடும் எச்சரிக்கை சமிக்ஞையை முடக்குவதற்கு கூட சிலர் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 2,800 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் 577 டொலர்கள் அபராதம் மற்றும் 4 டீமெரிட் புள்ளிகள் / முறையற்ற முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டினால் 385 டொலர்கள் அபராதம் மற்றும் 3 டீமெரிட் புள்ளிகள் கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் விக்டோரியா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...