Newsஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

ஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

-

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் விக்டோரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அதிநவீன வேகக் கமெராக்களைப் பயன்படுத்தி இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

3 மாத முன்னோடி திட்டத்தில் மட்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 7,000 சாரதிகள் அடையாளம் காணப்பட்டனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது வாகனம் வெளியிடும் எச்சரிக்கை சமிக்ஞையை முடக்குவதற்கு கூட சிலர் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 2,800 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் 577 டொலர்கள் அபராதம் மற்றும் 4 டீமெரிட் புள்ளிகள் / முறையற்ற முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டினால் 385 டொலர்கள் அபராதம் மற்றும் 3 டீமெரிட் புள்ளிகள் கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் விக்டோரியா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...