Newsபாரிஸ் ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாரிஸ் ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

கடந்த 1889 ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது.

இந்த நிலையில் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது. பின்னர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு அந்த மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது.

இதையடுத்து இரண்டு மணிநேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...