Newsகனடாவில் சேதமாக்கப்பட்ட இந்து கோயில்

கனடாவில் சேதமாக்கப்பட்ட இந்து கோயில்

-

இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர்.

குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்து கோயில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் இந்து கோயில்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதோடு கோவில் கதவில் ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என சுவரொட்டி ஓட்டிவைத்து சென்றுள்ளனர்.

மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த சுவரொட்டியையும் ஒட்டி வைத்துள்ளனர்.

கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

குருநானக் சீக்கியர் குருத்வாரா சாஹிப்பின் தலைவரான அவர், குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதார்.

இதனைத்தொடர்ந்து இந்த செயலில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...

இயற்கை பேரழிவுகளால் ஆஸ்திரேலியாவின் காப்பீட்டு இழப்புகள் பில்லியன் கணக்கான டாலர்களாக உயர்வு

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை, வெள்ளம் மற்றும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட காப்பீட்டு இழப்புகள் 3.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டில்...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக பெண்ணுக்கு அபராதம்

கான்பெராவிலிருந்து பெர்த் செல்லும் விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் 13 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில்,...