Newsகனடாவில் சேதமாக்கப்பட்ட இந்து கோயில்

கனடாவில் சேதமாக்கப்பட்ட இந்து கோயில்

-

இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர்.

குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்து கோயில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் இந்து கோயில்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதோடு கோவில் கதவில் ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என சுவரொட்டி ஓட்டிவைத்து சென்றுள்ளனர்.

மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த சுவரொட்டியையும் ஒட்டி வைத்துள்ளனர்.

கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

குருநானக் சீக்கியர் குருத்வாரா சாஹிப்பின் தலைவரான அவர், குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதார்.

இதனைத்தொடர்ந்து இந்த செயலில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...