Cinema3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட...

3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட தென்னிந்திய திரைப்படங்கள்

-

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது.

அதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடார் 2, ஓஎம்ஜி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மூலமாக இந்திய அளவில் ரூ.390 கோடிக்கும் (1513 கோடி இலங்கை ரூபா) அதிகமாக வசூலித்துள்ளதாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதாவது ஜெயிலர், கடார் 2, ஓம்ஜி2 மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்கள் இணைந்து பொக்ஸ் உபிஸ் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஒஃப் இந்தியா மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் ரூ.390 கோடிக்கும் அதிகமான வசூல். வார இறுதியில் இந்தியா முழுவதும் 2.10 கோடிக்கும் அதிகமான பேர் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளனர்.

நமது சினிமா வரலாற்றில் கடந்த 100 வருடத்தில் இது போன்று வார இறுதி வசூலினை பார்த்ததில்லை. மேலும் கடந்த 10 வருடத்தில் இவ்வளவு அதிகமான நபர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷியல் சினிமா மக்களிடம் சரியாக சென்றுள்ளதை இந்த பொக்ஸ் ஒபிஸ் வசூல் விவரங்கள் தெரிவிகின்றன. காலை காட்சிகள் கூட முழுவதுமாக நிரம்புகின்றன. இந்த வாரம் இந்திய சினிமாவின் கொமர்சியல் சினிமாவை விரும்புவர்களுக்கு சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. புதிய பாய்ச்சலுடன் சினிமா இயங்குவது மகிச்சியளிக்கிறது. சினிமா கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மிக்க நன்றி” எனக் கூறியுள்ளார்கள்.

நன்றி தமிழன்

Latest news

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதில் பிரான்சுடன் சேரப் போவதில்லை – அல்பானீஸ்

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா இணையாது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இஸ்ரேல் காசா பகுதிக்கு உதவி செய்வதை தடுத்ததைக்...