Melbourneமாடில்டாஸ் தோல்விக்குப் பிறகு மெல்போர்னில் கூடும் கூட்டங்களுக்கு அபராதம்

மாடில்டாஸ் தோல்விக்குப் பிறகு மெல்போர்னில் கூடும் கூட்டங்களுக்கு அபராதம்

-

நேற்றிரவு நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வன்முறையாக நடந்துகொண்ட பார்வையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னின் கூட்டமைப்பு சதுக்கத்தில் மிகவும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்த இடத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.அவுஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து அவர்கள் அமைதியின்றி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, 16 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட 04 இளைஞர்களுக்கு தலா 962 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் அடையாளம் காணப்பட்ட ஏனைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, போட்டியின் பின்னர் சிட்னி ரயிலை சேதப்படுத்திய இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் போட்டியை காண வந்த ஏராளமானோர் ரயில்கள் இல்லாததால் சிரமத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.

சிலர் இன்று காலை 01 மணி வரை ரயிலில் ஏறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு சிட்னியில் ரயில் தாமதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...