Newsஅடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை...

அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை ஒப்புதல்

-

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வீட்டு நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை கட்ட தேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக மேலதிகமாக 03 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் அன்டனி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவில் நிலவும் வீட்டு மற்றும் வாடகை வீட்டு நெருக்கடி இதன் மூலம் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

புதிய வீடமைப்புத் திட்டத்தின்படி, திட்டமிடல், வலயப்படுத்தல், காணி விடுவிப்பு மற்றும் மலிவு விலையில் கொள்வனவு ஆகிய கருத்துருக்களின் கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

வீட்டுப் பிரச்சினைக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகை வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு வாடகைக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அல்ல என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்தார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...