Sports22 வருட பார்வை சாதனையை முறியடித்த நேற்றைய மாடில்டாஸ் ஆட்டம்

22 வருட பார்வை சாதனையை முறியடித்த நேற்றைய மாடில்டாஸ் ஆட்டம்

-

மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணிக்கும் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கும் இடையிலான நேற்றைய அரையிறுதிப் போட்டி பார்வை சாதனைகளை முறியடித்தது.

2001 ஆம் ஆண்டிலிருந்து, அதாவது தற்போதைய டிவி பார்வையாளர்கள் கணக்கெடுப்பு அமைப்பு தொடங்கிய 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே அதிகம் பார்க்கப்பட்ட நேரலை நிகழ்வாக மாறியுள்ளது.

அதன்படி நேற்றைய போட்டியை சராசரியாக 7.13 மில்லியன் பார்வையாளர்கள் நேரலையில் கண்டுகளித்ததோடு, உச்சகட்டமாக 11.15 மில்லியன் பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போட்டியை சுமார் 6.17 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், சுமார் 957,000 பேர் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி நேற்றைய போட்டி இணையத்தில் ஒரே நேரத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 1க்கு 3 கோல்கள் என்ற கணக்கில் தோல்வியடைந்த மாடில்டாஸ் அவுஸ்திரேலிய மகளிர் கால்பந்தாட்ட அணி, இப் போட்டியில் 03வது இடத்துக்காக எதிர்வரும் சனிக்கிழமை சுவீடனுடன் போட்டியிடவுள்ளது.

அன்று மாலை 05.30 மணிக்கு ஆரம்பமாகும்.

மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கு இடையே சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 07:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...