Newsபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

-

கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸிற்க்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், ‘கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது.

இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்த சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பேசிய இந்த அமைப்பின் இயக்குனர் டொக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இது தொடர்பாக தெரிவிக்கையில் ,

சுகாதாரம் ஆபத்தில் இருக்கும்போது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கியமான பாடத்தை கொரோனா நமக்கு கற்றுத்தந்தது. வலி நிறைந்த இந்த பாடத்தை கொரோனா தொற்று காலத்தில் உலகம் அறிந்து கொண்டது.தற்போதைய நிலையில் கொரோனா தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை என்றாலும், உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடிக்கிறது.

ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தி இருக்கிறது. பிஏ.2.86 என்ற அந்த மாறுபாடு தற்போது கண் காணிக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

இந்த சந்தர்ப்பத்தில், தொற்றுநோய் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக சுகாதார சபையில் அது ஏற்றுக்கொள்ளப்படும். தொற்றுநோய் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் திருத்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளன.

நாளை (இன்று) முறைப்படி தொடங்கப்படும் டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான உலகளாவிய முன்முயற்சியை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் அனைத்து ஜி20 நாடுகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது டிஜிட்டல் சுகாதாரத்துக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய வியூகங்களை ஆதரிப்பதுடன், உலகளாவிய டிஜிட்டல் சுகாதார சான்றிதழ் நெட்வொர்க் உள்பட பிற முயற்சிகளையும் வலுப்படுத்தும்.இவ்வாறு உலக சுகாதார அமைப்பு இயக்குனர் தெரிவித்தார்.

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...