NewsAmazon-ல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் 14 வயது தமிழ் மாணவன்

Amazon-ல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் 14 வயது தமிழ் மாணவன்

-

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனான சைலேஷ்க்கு மாதந்தோறும் 2 லட்ச ரூபாயை வருமானமாக கொடுத்து வருகிறார் Amazon.

விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த நல்லபெருமாள்- முத்துலட்சுமி தம்பதியின் மகன் சைலேஷ், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் சைலேஷ், பெற்றோர் இஸ்திரி செய்யும் வேலை பார்த்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலையை அறிந்த சைலேஷ்க்கு தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மொபைல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், செயலிகள் (Apps) குறித்து கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தொடர்ந்து சொந்தமாக 3 செயலிகளை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார், தற்போது உலகின் பிரபலமான நிறுவனமான அமேசானுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதாவது புதுப்புது செயலிகளை உருவாக்கும் பணிக்கு அமேசான் சைலேஷுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கேம் விளையாட செல்போனை பயன்படுத்திய சைலேஷ் , தொழில்நுட்பத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் தற்போது அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறியுள்ளார். மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற ஆர்வம் சைலேஷை நல்ல நிலைமைக்கு உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் முறையான வழிகாட்டுதலில் செயலலியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனக்கு கணினி ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...