Newsகனடாவில் 15 ஆயிரம் வீடுகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு

கனடாவில் 15 ஆயிரம் வீடுகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு

-

கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா. இது பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கிய பகுதி ஆகும்.

இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதுடன் பரவ தொடங்கியது.

இதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். திடீர் தீ விபத்து காரணமாக இந்த பிராந்தியம் முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 36 ஆயிரம் பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2 ஆயிரத்து 400 வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதே போல் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ பரவி வருகிறது. அங்கு வசிக்கும் பலர் கார் மற்றும் விமானம் என அவசர அவசரமாக ஊரை விட்ட வெளியேறி வருகின்றனர்.

அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரில் 19 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.

தற்போது இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 15 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த எண்ணிக்கை 20 ஆயிரம் வீடுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

நியூ சவுத் வேல்ஸில் கடுமையாகி வரும் புகையிலை சட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க புதிய புகையிலை உரிம திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டவிரோத புகையிலை...

கருத்தடைக்கு பயப்படும் ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு நிவாரணம்

பிரபலமான கருத்தடை மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பை பரிந்துரைக்கும் டேனிஷ் ஆராய்ச்சி குழுவின் ஆய்வின் மீதான அச்சத்தை போக்க நிபுணர்கள் குழு முன்வந்துள்ளது. அதன்படி,...

ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என பெயரிடப்பட்ட நாய்

Bear என்ற நாய் ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. 2024 கோபர் சவால் போட்டியில் நுழைந்த Bear, இந்த ஆண்டு போட்டியின் வெற்றி நாயாக...

விக்டோரியா Expressway-யை ஒட்டிய குடியிருப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தென்மேற்கு விக்டோரியாவில் இன்று காலை டிரக் ஒன்று வீட்டின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். டவர் ஹில் பிரின்சஸ் நெடுஞ்சாலையில் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு...

ஆஸ்திரேலியாவில் தற்போது அதிகம் தேவைப்படும் Tradies வேலைகள்

BizCover ஆனது ஆஸ்திரேலியாவில் அதிக தேவை உள்ள டிரேடீஸ் வேலைகள் பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுளின் வேலை தேடுதல் தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அறிக்கை...

இன்னும் 6 நாட்களில் ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அபராதம்

வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இதன் காரணமாக, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் அபராதம்...