Newsமேலும் 300,000 பேருக்கு இலவச TAFE கல்விக்கான அழைப்பு

மேலும் 300,000 பேருக்கு இலவச TAFE கல்விக்கான அழைப்பு

-

மேலும் 300,000 TAFE மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குமாறு மாநில அரசுகளைக் கேட்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

தொழில் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உள்ள நிலையில், திறமையான பணியாளர்கள் இல்லாதது பெரும் பிரச்சனையாக உள்ளது என்று திறன் மற்றும் பயிற்சி அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் குறிப்பிட்டார்.

நோயாளி பராமரிப்பு – முதியோர் பராமரிப்பு – குழந்தைகள் பராமரிப்பு – மோட்டார் மெக்கானிக் – கொத்தனார் போன்ற ஏராளமான பணிகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் இத்தகைய படிப்புகளுக்குத் திரும்பாததால் திறமையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது என்று திறன் மற்றும் பயிற்சி அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் சுட்டிக்காட்டுகிறார்.

இதே நிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மிகக் கடுமையான வேலை வாய்ப்புப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவரது நிலைப்பாடு.

எனவே, மாநில அரசுகளும், மத்திய அரசும் அவசரத் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை, திறன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் வலியுறுத்துகிறார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...