Newsஅமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்

அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்

-

இந்திய வம்சாவளியான மினாள் படேல் (வயது 44) அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லேப் சொல்யூசன்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனமானது இடைத்தரகர்கள், கோல்சென்டர் மற்றும் டெலிமெடிசின் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பயனாளிகளை குறி வைத்து தொடர்பு கொண்டனர்.

அவர்கள் கேன்சர், மரபணு போன்ற பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட பிறகு டெலிமெடிசின் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் மருத்துவர் கையெழுத்தை பெற அவர்களுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளனர்.

கடந்த 2016-2019 காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான போலியான மருத்துவ பரிசோதனைகளை இந்த நிறுவனம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

இதன்மூலம் சுமார் ரூ.174 கோடி வரை படேல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இதில் படேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவரது சொத்து பறிமுதல் வழக்கு வருகின்ற 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...