Newsஅமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்

அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்

-

இந்திய வம்சாவளியான மினாள் படேல் (வயது 44) அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லேப் சொல்யூசன்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனமானது இடைத்தரகர்கள், கோல்சென்டர் மற்றும் டெலிமெடிசின் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பயனாளிகளை குறி வைத்து தொடர்பு கொண்டனர்.

அவர்கள் கேன்சர், மரபணு போன்ற பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட பிறகு டெலிமெடிசின் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் மருத்துவர் கையெழுத்தை பெற அவர்களுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளனர்.

கடந்த 2016-2019 காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான போலியான மருத்துவ பரிசோதனைகளை இந்த நிறுவனம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

இதன்மூலம் சுமார் ரூ.174 கோடி வரை படேல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இதில் படேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவரது சொத்து பறிமுதல் வழக்கு வருகின்ற 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...

Charlie Kirk-இன் குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க்

Charlie Kirk-இன் மரணத்தைத் தொடர்ந்து, எலோன் மஸ்க், Kirk-இன் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். Utta பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

இன்றும் அடுத்த வாரமும் மாற்றமடையும் மெல்பேர்ண் பேருந்து சேவை அட்டவணைகள்

மெல்பேர்ணில் நேற்றும் அடுத்த வாரமும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று CDC விக்டோரியா அறிவித்துள்ளது. சுயாதீன போக்குவரத்து சங்கம் நேற்று முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத்...