Newsஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

-

இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

தோல் தயாரிப்புகள், மின்னனு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

‘சிறப்பு வர்த்தக நாடு’ என அங்கிகாரம் கொடுத்து குறைவான வரிகளை இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கிறது. பொதுவாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் கூடுதல் வரி விதிக்கும். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக தெரிவித்து இந்திய வரி விதிப்பு முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாட்டால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என தெரிவித்து சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தபோவதாக அச்சுறுத்தினார். இதனால் அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் பேட்டி கண்டது.

அதில் இந்தியாவுக்கான தனது பொருளாதார நிலைப்பாடு மாறவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

‘வரிவசூல் ராஜா’ என இந்திய நாட்டை சுட்டிக்காட்டிய அவர் அமெரிக்கா நாட்டின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து குறிப்பிட்டார்.

‘பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை’ என தெரிவித்த அவர் ‘தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ‘அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்யப்பட்டால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி’ என தெரிவித்துள்ளார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...