Newsவெற்றிகரமாக நிலவில் இறங்கியது சந்திரயான்-3ன் விக்ரம்

வெற்றிகரமாக நிலவில் இறங்கியது சந்திரயான்-3ன் விக்ரம்

-

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. 

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

தரையிறங்கியது லேண்டர் கலன்

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது. 

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது. 

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி: இஸ்ரோ

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

மெல்பேர்ணில் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட நபர் – மூன்று பேர் மீது குற்றம்

மெல்பேர்ண் Kew Eastல் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த ஒரு கும்பலை எதிர்த்துப் போராட முயன்றபோது தந்தை ஒருவர் அரிவாளால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 39 வயதுடைய...