Cinemaயோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் - நடிகர் ரஜினிகாந்த்

யோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்

-

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்திருப்பதால் ஒட்டுமொத்த படக்குழுவுமே மகிழ்ச்சியில் உள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். ஆனால், அதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானாது. அவருக்கு வயது 51 ஆகும் நிலையில் ரஜினிகாந்துக்கு 72 வயதாகிறது. தன்னைவிட மிக மிக இளம் வயதுடையவரின் காலில் ரஜினிகாந்த் விழலாமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது சென்னை திரும்பியவுடன் பதில் அளித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என கூறியுள்ளார்.வ்

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...