Cinemaயோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் - நடிகர் ரஜினிகாந்த்

யோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்

-

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்திருப்பதால் ஒட்டுமொத்த படக்குழுவுமே மகிழ்ச்சியில் உள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். ஆனால், அதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானாது. அவருக்கு வயது 51 ஆகும் நிலையில் ரஜினிகாந்துக்கு 72 வயதாகிறது. தன்னைவிட மிக மிக இளம் வயதுடையவரின் காலில் ரஜினிகாந்த் விழலாமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது சென்னை திரும்பியவுடன் பதில் அளித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என கூறியுள்ளார்.வ்

நன்றி தமிழன்

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...