Cinemaயோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் - நடிகர் ரஜினிகாந்த்

யோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்

-

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்திருப்பதால் ஒட்டுமொத்த படக்குழுவுமே மகிழ்ச்சியில் உள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். ஆனால், அதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானாது. அவருக்கு வயது 51 ஆகும் நிலையில் ரஜினிகாந்துக்கு 72 வயதாகிறது. தன்னைவிட மிக மிக இளம் வயதுடையவரின் காலில் ரஜினிகாந்த் விழலாமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது சென்னை திரும்பியவுடன் பதில் அளித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என கூறியுள்ளார்.வ்

நன்றி தமிழன்

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...