Newsவிக்ரம் லேண்டர் நிலவின் மேல்பரப்பு வெப்பநிலை குறித்த முதல் பரிசோதனை குறிப்பை...

விக்ரம் லேண்டர் நிலவின் மேல்பரப்பு வெப்பநிலை குறித்த முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது

-

நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை என்னவென்பது குறித்து சந்திரயான்-3 விண்கலனின் விக்ரம் லேண்டர் முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது

இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra’s Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நிலவின் மேல் பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை செய்கிறது. இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது.

அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பகுதியில் ரோவர் வலம் வரும் படங்களின் தொகுப்பை இஸ்ரோ நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது. அதில் 26 கிலோ எடை கொண்ட ரோவர், தனது 6 சக்கரங்களால் தென்துருவப் பகுதியில் ரிமோட் கார் போன்று முன்னும், பின்னும் ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை செய்வதை தெளிவாக காணமுடிந்தது. இந்நிலையில் இன்று நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை பற்றிய பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...