Newsகோடை காலத்தில் விக்டோரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்வெட்டு

கோடை காலத்தில் விக்டோரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்வெட்டு

-

நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையங்கள் செயல்படாததால், வரும் கோடை காலத்தில் விக்டோரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அதீத வெப்பம் காரணமாக குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றல் தேவை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலம் தவிர, தெற்கு ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களிலும் எரிசக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதுடன், மின்சார சேமிப்பு மற்றும் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான புதிய வழிகளை உருவாக்குவதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்களை வீட்டில் நிறுவுவதன் மூலம் எரிசக்தி தேவையை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 2033 ஆம் ஆண்டளவில், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான ஆற்றல் உற்பத்தி சுமார் 62 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...