CinemaInstagram இல் கால் பதித்த நயன்தாரா

Instagram இல் கால் பதித்த நயன்தாரா

-

அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டினார்.

இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நயன்தாரா ஒரே நாளில் மில்லியனை கடந்த ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டகிராமை தொடங்கினார்.

பாலிவுட்டில் தடம் பதித்துள்ள நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரே நயன்தாரா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை காட்டப்போகிறார் என்பதை கூறுகிறது.

இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர், உலகு என குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன்தாரா, அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.

ஓணம் பண்டிகையை குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு காட்டினார். ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனுடன் குழந்தைகளுடன் ஜாலியாக நடந்து வரும் நயன்தாராவை பார்த்த ரசிகர்களும் குஷியாகினர். இது மட்டும் இல்லாமல் ஜவான் படத்தில் டிரெய்லரும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். 

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Gold Coast-ல் அதிகரித்துவரும் தற்கொலைகள்

Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த...

விக்டோரியாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி

விக்டோரியாவில் பள்ளிப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக $22.5 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதியிலிருந்து 46 பள்ளிகள் பயனடையும் என்று கல்வி அமைச்சர்...

இலவச மின்சாரம் வழங்கும் Solar Sharer எவ்வாறு செயல்படும்?

அரசு அறிவித்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. Solar Sharer என்று அழைக்கப்படும் இந்த...