Newsகர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

-

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் திருட்டில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டத்தில அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதில், தாகியா யங் நோக்கி பொலிஸார், “நீங்கள் வணிக வளாகத்தில் இருந்து பீர் பாட்டிலை திருடியதை ஊழியர்கள் கண்டுபிடித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர், எனவே உடனடியாக காரில் இருந்து வெளியேறுங்கள்” என அறிவுறுத்துகின்றனர்.

அதற்கு, ”தான் எதையும் திருடவில்லை என்று பதிலளித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை லேசாக திறந்து வைத்து கொண்டு பொலிஸாருடன் தாகியா யங் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் காரை முன் செலுத்த தாகியா யங் முயற்சிக்கவே காரின் முன் பக்கத்தில் நின்ற மற்றொரு பொலிஸ் அதிகாரி காரின் முன் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் தாகியா யங் காயமடைய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இடித்து நின்றது. உடனடியாக அவசர உதவிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து, சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த தாகியா யங்-கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக தாகியா யங் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...