Newsமுக்கிய 3 நாடுகளுக்கு தடை விதித்த நோபல் பரிசு விழா

முக்கிய 3 நாடுகளுக்கு தடை விதித்த நோபல் பரிசு விழா

-

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைப்பு விடுக்க போவதில்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த வியாழன் (31) வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

நோபல் அறக்கட்டளையின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான ரஷ்யவின் படையெடுப்பு, ஈரான் அரசின் மனித உரிமை மீறல் மற்றும் பெலாரஸ் ஜனாதிபதியின் சட்டவிரோத ஆட்சி ஆகியவற்றை கண்டிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் ஸ்டாக்ஹோமில் நடக்க உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...