Newsகத்தார் ஏர்வேஸ் கோரிக்கை மீதான முடிவில் தொழிலாளர் கட்சி அரசு உறுதியாக...

கத்தார் ஏர்வேஸ் கோரிக்கை மீதான முடிவில் தொழிலாளர் கட்சி அரசு உறுதியாக உள்ளது

-

ஆஸ்திரேலிய விமான நிலையங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கத்தார் ஏர்வேஸின் கோரிக்கையை நிராகரிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தொழிலாளர் கட்சி அரசாங்கம் வலியுறுத்துகிறது.

உரிய பரிசீலனைக்குப் பின்னரே உரிய தீர்மானம் எடுக்கப்பட்டதால், அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற செனட் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்படவுள்ள நிலையிலேயே அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கத்தார் ஏர்வேஸ் விமான கட்டணத்தை குறைக்க கூடுதல் விமானங்களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக வனேசா ஹட்சன் இன்று பதவியேற்றார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...