Newsசீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி

சீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி

-

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

13 ஆம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது.

4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987 ஆம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

இந்த நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீன பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்பட்டதை அடுத்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் இதனை சிலர் சேதப்படுத்தியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது பற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.

மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...