Newsசீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி

சீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி

-

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

13 ஆம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது.

4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987 ஆம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

இந்த நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீன பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்பட்டதை அடுத்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் இதனை சிலர் சேதப்படுத்தியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது பற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.

மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...