News3 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க மொரோக்கோவில் அறிவிப்பு

3 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க மொரோக்கோவில் அறிவிப்பு

-

வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் 6.8 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது.

குறித்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2,100 ஆக உயர்ந்துள்ளன.

2 ஆயிரத்து 59 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி அரைக்கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Salmonella Fear காரணமாக திரும்பப் பெறப்பட்ட தயாரிப்பு

Salmonella Fear காரணமாக, Woolworths, Coles மற்றும் IGA கடைகளில் விற்கப்படும் Alfalfa-ஐ திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 44 பேர்...

அமெரிக்க விசா வழங்குவதில் விசித்திரமான கட்டுப்பாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் விசா நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது...

உடலின் சொந்த செல்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு தீர்வு காணும் விக்டோரிய ஆராய்ச்சியாளர்கள்

விக்டோரியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு, புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்தும் ஒரு நோயெதிர்ப்பு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய முறை...

சிறுமியின் தலைவிதியை தீர்மானித்த ரயில் விபத்து

நியூ சவுத் வேல்ஸின் பர்னாபாவில் சரக்கு ரயிலில் மோதி ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.50 மணியளவில் குழந்தை ரயில் கடவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது...

நாடாளுமன்றத்தைத் தாக்க Neo-Nazisகளின் ஒரு குழு தயாராகி வருகிறதா? 

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் முன் Neo-Nazis குழு ஒன்று போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. தேசியவாத சோசலிச வலையமைப்பின் (NSN) 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் "Abolish the Jewish...

சிறுமியின் தலைவிதியை தீர்மானித்த ரயில் விபத்து

நியூ சவுத் வேல்ஸின் பர்னாபாவில் சரக்கு ரயிலில் மோதி ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.50 மணியளவில் குழந்தை ரயில் கடவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது...