Newsசிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

-

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.

குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் சாட்டையால் அடித்தும் கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் தரமற்ற உணவு வகைகளை பிள்ளைகளுக்கும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த 44 வயது தாயார் மீது வீட்டை அழித்து சேதப்படுத்தியதாகவும், தமது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்தும், அதை மறைத்து, பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த தந்தை அரேபிய மொழி பேசும் நாட்டவர் என்றும், தற்போது 56 வயதாகும் அவர் சொந்த நாட்டில் கட்டாய ராணுவ சேவைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர் எனவும், அப்படியான நடவடிக்கையானது அந்த காலகட்டத்தில் மரண தண்டனைக்கு நிகரான குற்றமாகும்.

இந்த நிலையில் சில காலம் தடுப்புக்காவலில் இருந்த அந்த நபர், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து பிரித்தானிய வம்சாவளி அவுஸ்திரேலிய பெண்ணை மணந்தார், இவர் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.

இந்த இருவருமே தங்கள் குடும்பத்தை கொடூரமான நிலைமையில் வைத்திருந்தனர். அந்த தந்தை சலவை இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார் எனவும், தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதை அவர் ஆதரித்தும் வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போது அந்த பிள்ளைகள் அனைவரும் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இவர்களில் இரண்டு மூத்த பெண்கள் தங்கள் பெற்றோர் தொடர்பில் பதிவு செய்த துஸ்பிரயோக காணொளி ஒன்றை அதிகாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததை அடுத்தே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...