Newsசிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

-

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.

குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் சாட்டையால் அடித்தும் கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் தரமற்ற உணவு வகைகளை பிள்ளைகளுக்கும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த 44 வயது தாயார் மீது வீட்டை அழித்து சேதப்படுத்தியதாகவும், தமது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்தும், அதை மறைத்து, பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த தந்தை அரேபிய மொழி பேசும் நாட்டவர் என்றும், தற்போது 56 வயதாகும் அவர் சொந்த நாட்டில் கட்டாய ராணுவ சேவைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர் எனவும், அப்படியான நடவடிக்கையானது அந்த காலகட்டத்தில் மரண தண்டனைக்கு நிகரான குற்றமாகும்.

இந்த நிலையில் சில காலம் தடுப்புக்காவலில் இருந்த அந்த நபர், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து பிரித்தானிய வம்சாவளி அவுஸ்திரேலிய பெண்ணை மணந்தார், இவர் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.

இந்த இருவருமே தங்கள் குடும்பத்தை கொடூரமான நிலைமையில் வைத்திருந்தனர். அந்த தந்தை சலவை இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார் எனவும், தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதை அவர் ஆதரித்தும் வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போது அந்த பிள்ளைகள் அனைவரும் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இவர்களில் இரண்டு மூத்த பெண்கள் தங்கள் பெற்றோர் தொடர்பில் பதிவு செய்த துஸ்பிரயோக காணொளி ஒன்றை அதிகாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததை அடுத்தே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...