Newsபிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம்

பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம்

-

சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்று புதிதாக பிறந்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு சான்றாக நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினையும் நாசா வெளியிட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் இரகசியத்ங்களை அறிய இந்த ஆண்டு அமெரிக்காவின் நாசாவினால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.

இந்நிலையில், ஒரு புதிய நட்சத்திரம் உருவாகியிருப்பதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் கண்டு அதன் புகைபடத்தை தற்போது அனுப்பி நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த நட்சத்திரம் அதிக நிறை உடையதாகவும் துருவப் பகுதியில் இருந்து சூடான காற்றை வெளியேற்றி வருவதாகவும், புகைப்படத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளனர்.

இந்த நட்சத்திரம் முழுமையாக உருவானதன் பின் அது சூரியனை போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும் என்றும்.

சூரியன் உருவாகும் போது எப்படி இருந்ததோ அதை போன்ற வடிவத்தில் இந்த நட்சத்திரம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த நட்சத்திரத்திற்கு குழந்தைச் சூரியன் (Baby Sun) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...