Newsபிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம்

பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம்

-

சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்று புதிதாக பிறந்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு சான்றாக நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினையும் நாசா வெளியிட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் இரகசியத்ங்களை அறிய இந்த ஆண்டு அமெரிக்காவின் நாசாவினால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.

இந்நிலையில், ஒரு புதிய நட்சத்திரம் உருவாகியிருப்பதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் கண்டு அதன் புகைபடத்தை தற்போது அனுப்பி நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த நட்சத்திரம் அதிக நிறை உடையதாகவும் துருவப் பகுதியில் இருந்து சூடான காற்றை வெளியேற்றி வருவதாகவும், புகைப்படத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளனர்.

இந்த நட்சத்திரம் முழுமையாக உருவானதன் பின் அது சூரியனை போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும் என்றும்.

சூரியன் உருவாகும் போது எப்படி இருந்ததோ அதை போன்ற வடிவத்தில் இந்த நட்சத்திரம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த நட்சத்திரத்திற்கு குழந்தைச் சூரியன் (Baby Sun) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...