Breaking Newsஅவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

-

அவுஸ்திரேலியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவிகளை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 24 வயதுடைய இளைஞர் 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...