Newsவங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

வங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

-

கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக வங்கி நிர்வாகம் வரவு வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, வாடகை கார் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி ராஜ்குமாரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அடுத்த 30 நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது.

முதலில், ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியை கண்ட ராஜ்குமார் போலியாக இருக்கும் என்று நினைத்துள்ளார். பின்னர், வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து செய்தி வந்திருப்பதை உணர்ந்தார்.

வெறும் ரூ.105 மட்டுமே இருந்த வங்கிக் கணக்கில் ரூ. 9,000 கோடி இருப்பதை பார்த்த ராஜ்குமார், தனது நண்பருக்கு ரூ.21,000 அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கிலிருந்த மீதி தொகையை வங்கி நிர்வாகம் மீண்டும் எடுத்துக் கொண்டது.

அடுத்த நாள் காலை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு தவறுதலாக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், செலவு செய்த தொகையை திரும்ப அளிக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் சில வங்கி அதிகாரிகள் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சென்னை திநகரில் உள்ள வங்கிக் கிளைக்கு வழக்கறிஞருடன் நேரில் சென்று ராஜ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில், ராஜ்குமார் செலவு செய்த தொகையை திரும்ப அளிக்க வேண்டாமென்றும், வங்கி சார்பில் கார் கடன் வழங்குவதாகவும் தெரிவித்து, வங்கி அதிகாரிகள் சமரசம் செய்துள்ளனர்.

வங்கியின் தவறால் அரை மணிநேரம் கோடீஸ்வரராக இருந்த ராஜ்குமாருக்கு ஏமாற்றத்துக்கு பதிலாக ரூ.21,000 மிஞ்சியது.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...