Newsவங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

வங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

-

கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக வங்கி நிர்வாகம் வரவு வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, வாடகை கார் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி ராஜ்குமாரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அடுத்த 30 நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது.

முதலில், ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியை கண்ட ராஜ்குமார் போலியாக இருக்கும் என்று நினைத்துள்ளார். பின்னர், வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து செய்தி வந்திருப்பதை உணர்ந்தார்.

வெறும் ரூ.105 மட்டுமே இருந்த வங்கிக் கணக்கில் ரூ. 9,000 கோடி இருப்பதை பார்த்த ராஜ்குமார், தனது நண்பருக்கு ரூ.21,000 அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கிலிருந்த மீதி தொகையை வங்கி நிர்வாகம் மீண்டும் எடுத்துக் கொண்டது.

அடுத்த நாள் காலை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு தவறுதலாக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், செலவு செய்த தொகையை திரும்ப அளிக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் சில வங்கி அதிகாரிகள் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சென்னை திநகரில் உள்ள வங்கிக் கிளைக்கு வழக்கறிஞருடன் நேரில் சென்று ராஜ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில், ராஜ்குமார் செலவு செய்த தொகையை திரும்ப அளிக்க வேண்டாமென்றும், வங்கி சார்பில் கார் கடன் வழங்குவதாகவும் தெரிவித்து, வங்கி அதிகாரிகள் சமரசம் செய்துள்ளனர்.

வங்கியின் தவறால் அரை மணிநேரம் கோடீஸ்வரராக இருந்த ராஜ்குமாருக்கு ஏமாற்றத்துக்கு பதிலாக ரூ.21,000 மிஞ்சியது.

Latest news

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...

Charlie Kirk-இன் குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க்

Charlie Kirk-இன் மரணத்தைத் தொடர்ந்து, எலோன் மஸ்க், Kirk-இன் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். Utta பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

இன்றும் அடுத்த வாரமும் மாற்றமடையும் மெல்பேர்ண் பேருந்து சேவை அட்டவணைகள்

மெல்பேர்ணில் நேற்றும் அடுத்த வாரமும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று CDC விக்டோரியா அறிவித்துள்ளது. சுயாதீன போக்குவரத்து சங்கம் நேற்று முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத்...