Newsகோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

கோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

-

இந்த வார இறுதியில் நாட்டில் கோழிக்கறி தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், ஏஎப்எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கோழி உற்பத்தி நிறுவனமொன்றின் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையே இதற்குக் காரணம்.

இதன்படி, பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் முக்கிய துரித உணவு உணவகங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் தற்போது தங்கள் கடைகளில் சிக்கன் தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளன.

ஊழியர்களின் மணித்தியால சம்பளம் மேலும் 1.5 டொலர்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த சேவைக் காலமான 6 மாதங்களின் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரி ஊழியர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடையாள வேலைநிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் 05 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட கோழி உற்பத்தி நிறுவன ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...