Newsஉலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

-

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகியுள்ளது.

தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். இது ‘உலகின் முனை’ (Edge of World)எனவும் அழைக்கப்படுகிறது.

அன்தார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீற்றர் வேகத்தில் இங்கு வந்து சேர்கின்றது.

உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டொக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.

இதே போன்று உலகெங்கிலும் உள்ள பிற சுத்தமான காற்று உள்ள தளங்கள், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு மாநிலமான ஹவாயில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகியவையாகும்.

சுத்தமான காற்று உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பதால் இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என் விளம்பரம் செய்து ‘டஸ்மேனிய காற்று’ என பெயரிட்டு பாட்டில்களில் இக்காற்றினை அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...