Newsமேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

-

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.

புதிய ஆட்சேர்ப்பின் கீழ், மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு ஏற்கனவே 30 வெளிநாட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் விசா நிராகரிப்பு காரணமாக கணிசமானோர் அந்த வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சில அதிகாரிகளுக்கு விசா கிடைத்தாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு உடல்நலக் காரணங்களால் விசா கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த 12 மாதங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்காக சுமார் 1,400 சர்வதேச விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எதிர்வரும் 05 வருடங்களில் பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 750 வெளிநாட்டு அதிகாரிகள் மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஆட்சேர்ப்பு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் Claire O’Neill, குடிவரவு சட்டங்கள் தொடர்பாக நாட்டில் நெருக்கடி நிலவுவதாகவும், அது தொடர்பான பிரச்சனைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...