Newsசீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்கு சென்ற பிரபல நாட்டின் எம்.பிக்கள் குழு

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்கு சென்ற பிரபல நாட்டின் எம்.பிக்கள் குழு

-

சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலியாவின் 6 எம்.பிக்கள் கொண்ட குழு தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

1949ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது, ஆனால் சமீபகாலமாக தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா பகிரங்கமாக அறிவித்து வருகிறது.

மேலும் தைவானுடன் மற்ற உலக நாடுகள் நேரடி தூதரக உறவுகள் எதையும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் சீனா அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தைவானுடனான எரிசக்தி, மற்றும் செமி-கண்டக்டர் துறை ஆகியவற்றில் பொருளாதார ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவின் 6 எம்.பிக்கள் கொண்ட குழு தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையில் சீனாவுக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவில் உரசல் நிலவி வந்தது.

அதை சீராக்க இருநாட்டு அரசாங்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், ஆனால் இந்த சமயத்தில் அவுஸ்திரேலிய எம்.பி-களின் தைவான் பயணம் இருநாட்டு உறவில் புகைச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய எம்.பிக்களின் இந்த பயணத்தை கண்டித்து சீனா அவுஸ்திரேலியாவின் பார்லி மற்றும் பிற ஏற்றுமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை நிர்ணயித்துள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...