Newsசீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்கு சென்ற பிரபல நாட்டின் எம்.பிக்கள் குழு

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்கு சென்ற பிரபல நாட்டின் எம்.பிக்கள் குழு

-

சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலியாவின் 6 எம்.பிக்கள் கொண்ட குழு தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

1949ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது, ஆனால் சமீபகாலமாக தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா பகிரங்கமாக அறிவித்து வருகிறது.

மேலும் தைவானுடன் மற்ற உலக நாடுகள் நேரடி தூதரக உறவுகள் எதையும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் சீனா அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தைவானுடனான எரிசக்தி, மற்றும் செமி-கண்டக்டர் துறை ஆகியவற்றில் பொருளாதார ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவின் 6 எம்.பிக்கள் கொண்ட குழு தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையில் சீனாவுக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவில் உரசல் நிலவி வந்தது.

அதை சீராக்க இருநாட்டு அரசாங்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், ஆனால் இந்த சமயத்தில் அவுஸ்திரேலிய எம்.பி-களின் தைவான் பயணம் இருநாட்டு உறவில் புகைச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய எம்.பிக்களின் இந்த பயணத்தை கண்டித்து சீனா அவுஸ்திரேலியாவின் பார்லி மற்றும் பிற ஏற்றுமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை நிர்ணயித்துள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...