Newsமுட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

-

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல், வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றால் முட்டைத் தொழில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் தினசரி 18 மில்லியன் முட்டைகள் நுகரப்படுகின்றன, கடந்த நிதியாண்டில் மட்டும் 6.6 பில்லியன் முட்டைகள் நுகரப்பட்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் முட்டை தேவையில் 1/4 கிழக்கு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் முட்டை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஒட்டுமொத்தமாக நாட்டின் முட்டை விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறு நோய்கள் காரணமாக, கிழக்கு ஆஸ்திரேலியாவில் முட்டை உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட 05 லட்சம் விலங்குகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முட்டையின் விலை வேகமாக அதிகரித்துள்ளதோடு 12 முட்டைகளின் விலை 04 டொலர்களில் இருந்து 08 டொலர்களாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...