Newsமுட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

-

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல், வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றால் முட்டைத் தொழில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் தினசரி 18 மில்லியன் முட்டைகள் நுகரப்படுகின்றன, கடந்த நிதியாண்டில் மட்டும் 6.6 பில்லியன் முட்டைகள் நுகரப்பட்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் முட்டை தேவையில் 1/4 கிழக்கு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் முட்டை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஒட்டுமொத்தமாக நாட்டின் முட்டை விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறு நோய்கள் காரணமாக, கிழக்கு ஆஸ்திரேலியாவில் முட்டை உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட 05 லட்சம் விலங்குகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முட்டையின் விலை வேகமாக அதிகரித்துள்ளதோடு 12 முட்டைகளின் விலை 04 டொலர்களில் இருந்து 08 டொலர்களாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...