Newsவெப்பநிலை அதிகரிப்பால் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழப்பு

வெப்பநிலை அதிகரிப்பால் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழப்பு

-

பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை அமேசான் மழைக்காடு பரந்து காணப்படுகின்றது.

வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே டெஃப் (Tefe) பிராந்தியம் உள்ளது.

இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது.

இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

‘இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாதது. டொல்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் தொடர்புள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை’ என பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.

உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட அவுஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 இலட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபட்டு வருவதால் இது போன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.

இந்த நிகழ்வு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Gold Coast-ல் அதிகரித்துவரும் தற்கொலைகள்

Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த...

விக்டோரியாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி

விக்டோரியாவில் பள்ளிப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக $22.5 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதியிலிருந்து 46 பள்ளிகள் பயனடையும் என்று கல்வி அமைச்சர்...

இலவச மின்சாரம் வழங்கும் Solar Sharer எவ்வாறு செயல்படும்?

அரசு அறிவித்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. Solar Sharer என்று அழைக்கப்படும் இந்த...