Newsஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கடித்துக் குதறிய செல்லப்பிராணிகள்!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கடித்துக் குதறிய செல்லப்பிராணிகள்!

-

அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணொருவர் தனது செல்லப்பிராணிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெர்த் நகரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா பில் (31). இவர் Rottweiler இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.

அவற்றுக்கு ஹார்லெம், ஃபோர், செவென் மற்றும் பிராங்க்ஸ் என பெயரிட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நிகிதா தனது நாய்களால் தாக்கப்பட்டார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர். பின்னர் நிகிதா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு நிகிதாவிற்கு 5 அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அன்றைய தினம் ஒரு நாய்க்கு அவர் பல் துலக்கிவிடாததால், கோரைன் பாக்டீரியா தொற்று அவருக்கு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு தீவிரமான சிக்கல்கள் உருவாகியிருப்பதாக தெரிவித்த குடும்பத்தினர், நிகிதா ஒரு போராளி அவர் மீண்டு வருவார் என கூறியுள்ளனர். 

இதற்கிடையில், பிராங்க்ஸ் நாயை டெஸர் முறையில் மருத்துவர் பிடிக்கும் முயற்சி தோல்வியுற்றதால், பொலிஸார் அதனை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாய்கள் தங்கள் உரிமையாளரான நிகிதாவை தாக்க தூண்டியது எது என்பது தெளிவாக தெரியவில்லை.  

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...