NewsNSW-வில் பல தசாப்தங்களில் மிக அதிகமாகியுள்ள எரிபொருள் திருட்டு

NSW-வில் பல தசாப்தங்களில் மிக அதிகமாகியுள்ள எரிபொருள் திருட்டு

-

நியூ சவுத் வேல்ஸில் எரிபொருள் திருட்டு பல தசாப்தங்களில் மிக அதிகமாக உள்ளது.

மாநில குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எரிவாயு நிலையங்களில் இருந்து எரிபொருளை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியேறுவது மிகவும் பொதுவான நிகழ்வு.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,763 சாரதிகள் கட்டணம் செலுத்தாமல் எரிபொருள் எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது 1,272 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 11,763 பேரில், அடையாளம் காணப்பட்ட 1,300 பேர் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளாக்டவுன் பகுதியிலேயே அதிகளவான எரிபொருள் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் விக்டோரியா மாகாணத்தில் பணம் செலுத்தாமல் எரிபொருளை எடுத்துக்கொண்ட 4,109 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பன இதற்கு முக்கியக் காரணம்.

ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் எரிபொருள் திருட்டு மதிப்பு சுமார் 85 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...