NewsNSW-வில் பல தசாப்தங்களில் மிக அதிகமாகியுள்ள எரிபொருள் திருட்டு

NSW-வில் பல தசாப்தங்களில் மிக அதிகமாகியுள்ள எரிபொருள் திருட்டு

-

நியூ சவுத் வேல்ஸில் எரிபொருள் திருட்டு பல தசாப்தங்களில் மிக அதிகமாக உள்ளது.

மாநில குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எரிவாயு நிலையங்களில் இருந்து எரிபொருளை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியேறுவது மிகவும் பொதுவான நிகழ்வு.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,763 சாரதிகள் கட்டணம் செலுத்தாமல் எரிபொருள் எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது 1,272 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 11,763 பேரில், அடையாளம் காணப்பட்ட 1,300 பேர் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளாக்டவுன் பகுதியிலேயே அதிகளவான எரிபொருள் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் விக்டோரியா மாகாணத்தில் பணம் செலுத்தாமல் எரிபொருளை எடுத்துக்கொண்ட 4,109 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பன இதற்கு முக்கியக் காரணம்.

ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் எரிபொருள் திருட்டு மதிப்பு சுமார் 85 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...