Newsபெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

பெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

-

உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம் பெர்த்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

189 மீட்டர் உயரம் கொண்ட இதில் 50 தளங்கள் உள்ளன, இதில் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டடக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கட்டடத்தின் 40 வீதத்தை வலுவான இலகுவான மரத்தினால் உருவாக்க திட்டமிடுபவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் 100 வீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மரத்தாலான கட்டிடத்தை பசுமையான சூழலில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் கட்டுவது குறித்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 80 மின்சார வாகனங்களுக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

25 மாடிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான மரக் கட்டிடம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ளது, அதன் உயரம் 86.6 மீட்டர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...