Melbourneமெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

மெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

-

விக்டோரியா மாநில அதிகாரிகள் மெல்போர்னில் ஏற்பட்ட வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 500 வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கின.

பேரிடர் எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சைக் குழுவை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி தற்போது 15 பரிந்துரைகள் அடங்கிய குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விக்டோரியா மாநிலம் முழுவதும் புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பான புதிய மாதிரியும் உரிய பரிந்துரைகளுக்கு இணங்க முன்வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்மூலம் பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் முன் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

06 மணித்தியாலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில், சரியான தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பழைய குழாய் அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...