Melbourneமெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

மெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

-

விக்டோரியா மாநில அதிகாரிகள் மெல்போர்னில் ஏற்பட்ட வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 500 வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கின.

பேரிடர் எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சைக் குழுவை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி தற்போது 15 பரிந்துரைகள் அடங்கிய குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விக்டோரியா மாநிலம் முழுவதும் புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பான புதிய மாதிரியும் உரிய பரிந்துரைகளுக்கு இணங்க முன்வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்மூலம் பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் முன் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

06 மணித்தியாலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில், சரியான தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பழைய குழாய் அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...