Melbourneமெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

மெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

-

விக்டோரியா மாநில அதிகாரிகள் மெல்போர்னில் ஏற்பட்ட வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 500 வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கின.

பேரிடர் எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சைக் குழுவை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி தற்போது 15 பரிந்துரைகள் அடங்கிய குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விக்டோரியா மாநிலம் முழுவதும் புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பான புதிய மாதிரியும் உரிய பரிந்துரைகளுக்கு இணங்க முன்வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்மூலம் பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் முன் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

06 மணித்தியாலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில், சரியான தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பழைய குழாய் அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...