News"X" க்கு போட்டியாக வந்த திரெட்ஸ் பின்னடைவு

“X” க்கு போட்டியாக வந்த திரெட்ஸ் பின்னடைவு

-

எக்ஸ் தளத்துக்கு போட்டி எனக் கருதப்பட்டு மிகவும் பரபரப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாவின் திரெட்ஸ் செயலி பயன்பாடு ஆரம்பித்த 3 மாதங்களிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, எக்ஸ் தளத்துக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற செயலியைக் கடந்த ஜூலை 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தியது.

அந்நேரத்தில் எக்ஸ் தளத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள், சந்தா கட்டணம் என்று புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதால் எக்ஸ் தளத்துக்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகமான வெறும் 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இதில் இணைந்தனர்.

பயனர்கள் எளிதாக திரெட்ஸில் கணக்கு தொடங்கும்விதமாகவும் அதிகமாக பயனர்களை வரவழைக்கும் பொருட்டும் இன்ஸ்டாகிராம் கணக்கின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி திரெட்ஸில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படியே வேறு எந்த சமூக வலைத்தளமும் செய்யாத சாதனையை திரெட்ஸ் செய்தது. தொடங்கிய சில நாள்களில் அதிக பயனர்களைப் பெற்ற செயலி திரெட்ஸ் எனலாம். 5 நாட்களில் 10 கோடி பேர் இணைந்ததாக நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...