News40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர்...

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர் சிட்னியில் கைது

-

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 சந்தேகநபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த சரக்கு விமானத்தின் சேமிப்பு முனைய கொள்கலனொன்றில் குறித்த கொக்கேய்ன் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

விமான நிலைய பணியாளர்கள் இருவரும், விமான நிலையத்திற்கு வெளியே கொக்கெய்னை எடுத்துச் சென்று காரில் வந்த 24 வயதுடைய ஒருவரிடம் கொடுத்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரான 42 வயதுடைய நபரும் மற்றுமொரு நபரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 24 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 5 அவுஸ்திரேலியர்களும் நவம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

மெல்பேர்ணில் இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு கிராமத்தை வாங்கலாம்!

மெல்பேர்ணில் உள்ள இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு முழு கிராமத்தையும் வழங்கும் ஒரு தனித்துவமான சொத்து ஒப்பந்தம் Mount Dandenong-இல் நடைபெறுகிறது. மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...