News40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர்...

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர் சிட்னியில் கைது

-

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 சந்தேகநபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த சரக்கு விமானத்தின் சேமிப்பு முனைய கொள்கலனொன்றில் குறித்த கொக்கேய்ன் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

விமான நிலைய பணியாளர்கள் இருவரும், விமான நிலையத்திற்கு வெளியே கொக்கெய்னை எடுத்துச் சென்று காரில் வந்த 24 வயதுடைய ஒருவரிடம் கொடுத்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரான 42 வயதுடைய நபரும் மற்றுமொரு நபரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 24 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 5 அவுஸ்திரேலியர்களும் நவம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...