News40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர்...

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர் சிட்னியில் கைது

-

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 சந்தேகநபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த சரக்கு விமானத்தின் சேமிப்பு முனைய கொள்கலனொன்றில் குறித்த கொக்கேய்ன் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

விமான நிலைய பணியாளர்கள் இருவரும், விமான நிலையத்திற்கு வெளியே கொக்கெய்னை எடுத்துச் சென்று காரில் வந்த 24 வயதுடைய ஒருவரிடம் கொடுத்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரான 42 வயதுடைய நபரும் மற்றுமொரு நபரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 24 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 5 அவுஸ்திரேலியர்களும் நவம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...