Sportsஅவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்ற இந்தியா - உலக கிண்ண...

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்ற இந்தியா – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா -அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற, அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Steven Smith 46 ஓட்டங்களையும் David Warner 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்தியா அணி சார்பில் R Jadeja 3 விக்கெட்டுக்களையும் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதற்கமைய 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று வெற்றியை தழுவியது.

இந்தியா அணி சார்பில் அதிரடியாக ஆடிய KL Rahul 97 ஓட்டங்களையும் V Kohli 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Josh Hazlewood 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...