Canberraபைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

பைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

-

அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கான்பெர்ரா நகரில் இருந்து புறப்பட்ட இலகுரக விமானம் குயின் பெயான் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் இருந்த விமானி மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Cirrus SR 22 இலகுரக விமானம் வெள்ளிக்கிழமை மதியம் கான் பெர்ராவில் இருந்து புறப்பட்டு, சிட்னியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் பெயன் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து அவுஸ்திரேலிய விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமான விபத்தில் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவரான விமானி, விமானத்தில் இருந்த மூன்று குழந்தைகளின் தாத்தா 65 வயதான பீட்டர் நால்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குழந்தைகள் 11, 9 மற்றும் 6 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...