Newsதீவிரவாத வன்முறையை தூண்டும் கணக்குகளை முடக்கிய எக்ஸ் தளம்

தீவிரவாத வன்முறையை தூண்டும் கணக்குகளை முடக்கிய எக்ஸ் தளம்

-

எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ தெரிவித்தாவது, எக்ஸ் பொது மக்களுக்களின் உரையாடலுக்கான தளம். இது போன்ற சிக்கலான தருணங்களில் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் எக்ஸ் தளத்தின் மூலமாக பரவுவதைத் தடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரவாத அல்லது வன்முறையைத் தூண்டும் குழுக்களுக்கான இடம் எக்ஸ் தளத்தில் கிடையாது, அது போன்ற சார்புடைய கணக்குகளை நீக்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் விடுத்த 24 மணி நேர எச்சரிக்கை அறிவுறுத்தலைத் தொடர்ந்து எக்ஸ் தளம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எக்ஸ் மட்டுமில்லாமல் மெட்டா குழுமத்தின் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர் தொடர்பான தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் ஐரோப்பிய யூனியனின் இணைய விதிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் இணைய வழியில் பரவுவதைத் தடுக்க ஐரோப்பிய யூனியனால் புதிதாக உருவாக்கப்பட்ட எண்ம சேவைகள் சட்டத்தின் விதிமுறைகள் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

சிட்னி புத்தாண்டு வாணவேடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு

சிட்னியின் அடையாள புத்தாண்டு கொண்டாட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. 2026 புத்தாண்டு கொண்டாட்டம், கண்கவர் வாணவேடிக்கையுடன் நடைபெறும் என்றும், Bondi பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து...